ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய ஹிருணிகா!

11 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் இருந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட விரக்தியே தனது பதவி விலகளுக்கு காரணம் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் மீண்டும் தம்மை பாராளுமன்றத்திற்கு பொது மக்கள் தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.