திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தின் களஞ்சியசாலையில் தீ விபத்து

14 0

உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தின் களஞ்சியசாலையில் சனிக்கிழமை (12) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிலங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீயினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொருள் சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் உயிலங்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.