சில பாடசாலைகள் நாளை மூடப்படும்!

10 0

கடும் மழையுடனான வானிலை காரணமாக மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (14) மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கடுவலை, கொலன்னாவை கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளும் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வத்தளை கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.