நெல்லியடியில் லொறி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

10 0

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்துக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில்  ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை  வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து  பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிறிய லொறியே மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து, சடலம் மந்திகை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விபத்தின்போது லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.