அனுஷா சந்திரசேகரன் வேட்புமனுவில் கையொப்பம்

16 0

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் கையொப்பமிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜன ஜனநாயக குரல் கட்சியில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக மறைந்த பெ.சந்திரசேகரனின் புதல்வியான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகியிருந்தது.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளராக பதவி வகித்த அனுஷா சந்திரசேகரன், கடந்த பொதுத் தேர்தலில் கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையினால், சுயேட்சையாக போட்டியிட்டு 17 ஆயிரத்து 107 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.