கைவிடப்பட்ட நிலையில் உள்ள வைத்தியசாலையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

15 0

மெதிரிகிரிய , வடதாகெய பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானைக் கூட்டம் வைத்தியசாலையின் கற்தூண்களை இடித்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்திற்கு அண்மையில் 6 காட்டு யானைகள் கூட்டமாக வந்ததாக தொல்லியல் அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், மதிய நேரத்தில் யானைகளை விரட்டினால், அருகில் உள்ள கிராம மக்களுக்கும், வீதிகளில் பயணிக்கும் பொது மக்களுக்கும் யானைகளினால் இடையூறுகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.