மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான மீளாய்வு

17 0

மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை  (07)  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன்  மாவட்ட அரசாங்க அதிபரும் இத் திட்டத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளமைக்கு நன்றிகளையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இத்திட்டத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில்  மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கும் போது பெண்களையும் விகிதாசார அடிப்படையில் சேர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இதன்போது மாவட்ட இணைப்பாளர் சமூக சேவை உத்தியோகத்தர்,  மாவட்ட இணைப்பாளர்  மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை திணைக்களத்தின் சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.