பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

18 0

பொகவந்தலாவை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார்  தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொகவந்தலாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.