பீடி இலைகளுடன் ஒருவர் நுரைச்சோலையில் கைது

17 0

பீடி இலைகளை கடத்த முற்பட்ட சிலர் தப்பியோடிய நிலையில், ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நுரைச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் நுரைச்சோலை இழந்தையடி கரையோரப் பகுதியில்  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து சுமார் 2500 கிலோ பீடி இலைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் வேன் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பீடி இலைகள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியானவை என கூறப்படுகிறது.

பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி, வேன் ஆகியன கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.