வடக்கு மாகாண கிரிக்கட் மற்றும் மகளீர் கரப்பந்தாட்டம் – கிளிநொச்சிமாவட்டம் வெற்றி

327 0

வடக்கு மாகாணத்தின் கிரிக்கட் மற்றும் மகளீருக்கான கரப்பந்தாட்டங்களில் கிளிநொச்சிமாவட்டம் வெற்றிபெற்றது.

வடக்குமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்திலும் இளைஞர் சேவை மன்ற மைதானத்திலும் ஆரம்பமானது.

துடுப்பாட்டம் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்திலும் கரப்பந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்திலும் நடைபெற்றது.

துடுப்பாட்டத்தில் இறுதி ஆட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அணியும் யாழ்ப்பாண மாவட்ட அணியும் மோதின.

இதில் கிளிநொச்சி மாவட்ட அணி வெற்றிபெற்றது.

இளைஞர் சேவைமன்ற மைதானத்தில் நடைபெற்ற மகளீருக்கான கரப்பந்துப்போட்டியிலும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் யாழ்ப்பாண மாவட்ட அணியினரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.