உழவு இயந்திரம் மோதி ஒருவர் பலி

326 0
கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
உழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டர் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் மோட்டர் சைக்கிலில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.