தகுதிப் பெற்றுள்ள சகல அரச உத்தியோகஸ்தர்களும் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்

8 0

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் பொதுத்தேர்தலுக்கும் தபால்மூல வாக்களிப்புக்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். நாளை செவ்வாய்க்கிழமை  (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி  வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இம்மாதம் 4 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ள அரச உத்தியோககஸ்தர்கள் நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த சகல அரச உத்தியோகத்தர்களும். பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக் (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டுமென்பதுடன், அனைத்து தாபனத் தலைவர்கள், அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்  தபால் மூல வாக்களிப்புக்கு 736, 586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24,286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.  இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் 712321 அரச உத்தியோகஸ்தர்கள் தபால்மூலம் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.