ஹங்வெல்லயில் துப்பாக்கி பிரயோகம் – வர்த்தகர் பலி

7 0

ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத நபரொருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவர் 55 வயதுடைய பஸ் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

டி-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.