இத்தபான பகுதியில் ஆணின் சடலம்

10 0

இத்தபான பொலிஸ் களத்தில் அமுஹுந்துடுவ பகுதியில் உள்ள முனமல்வத்தை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் நேற்று சனிக்கிழமை (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தபான பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தபான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், சடலம் மிகவும் அழுகிய நிலையில் உள்ளதாகவும் உடல் உறுப்புகளை விலங்குகள் தின்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், இத்தபான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.