இன்று இரவு நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

8 0

நாட்டின் பல பிரதேசங்களில் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அவதானம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இந்த அபாயம் நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.