பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோது கழன்று விலகிய சக்கரங்கள் – 20 பேரின் உயிரை காப்பாற்றிய சாரதி

11 0

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று நேற்று மாலை (28) வெளிமடை – பொரலந்த வீதியில்  பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டு சமநேரத்தில் அகன்று விலகிச் சென்றுள்ளன.

இதனால் பேருந்து பாரிய விபத்தில் சிக்கவிருந்த நிலையில், சாரதி உரிய நேரத்தில் பேருந்தை தரித்து நிறுத்தியதால் விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

பேருந்தில் 20 பயணிகள் வரை இருந்த நிலையில், சமயோசிதமாக செயற்பட்டு பேருந்தை நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதியை பயணிகள் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.