வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுசபை கூட்டம்

10 0

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் சபை கூட்டம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் இரட்ணலிங்கத்தை பொதுச் சபையினால் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யும் செயற்பாடு இடம்பெற்றதோடு கட்சியினுடைய அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.