முறைப்படி விசா வழங்கும் நடைமுறை

22 0
image

முன்னைய விசா வழங்கும் நடைமுறை இன்று நள்ளிரவு 12 மணிமுதல் செயற்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்னைய விசா வழங்கும் நடைமுறை மீட்;டெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசா வழங்கும் நடைமுறை தொடர்பான சமீபத்தைய விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்  விசா வழங்கும் நடைமுறையில் காணப்பட்ட சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு கடந்த 24 மணிநேரத்தில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுமுதல் வெளிநாட்டவர்கள் அனைவரும் முன்னைய நடைமுறையின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

விஎவ்ஸ் குளோபலி;ன் விசா நடைமுறை பலருக்கு குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை ஏற்படுத்தியது குறிப்பாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.