போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தந்தை தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

25 0

போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை, கித்துல்கல இங்கிரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்துள்ளதாகவும் இவருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.