மின் கம்பத்தில் மோதி கார் விபத்து ; ஒருவர் படுகாயம்

16 0

பதுளை – மஹியங்கனை வீதியில் பலகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.