எல்ல கிதல்எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ பாரிய அளவில் பரவி வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் சுமார் பத்து ஏக்கருக்கு மேல் இந்த வனப்பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாகவும் தீயை அணைப்பதற்கு இராணுவத்தினரின் உதவியை நாடி உள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.