லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் மறைவிடங்ள் தளங்களிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறவேண்டும்!

36 0

லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளங்கள் உடகட்டமைப்பு வசதிகளிற்கு அருகில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

லெபானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தீவிரதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

லெபானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்தனர் என லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானின் பெக்கா பள்ளத்;தாக்கிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மந்தை மேய்ப்பவர் ஒருவரே உயிரிழந்தார் அவரது குடும்பத்தினர் காயமடைந்துள்ளனர் என லெபனான் அரசாங்கத்தின் தேசிய செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை தென்லெபனான் மீது இஸ்ரேல் படையெடுக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரேலின் இராணுவஅதிகாரியொருவர் தற்போது வான்வெளி நடவடிக்கை குறித்து மாத்திரம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.