ஜனாதிபதி அநுரவுக்கு உகண்டா ஜனாதிபதி வாழ்த்து !

26 0

இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு உகாண்டா ஜனாதிபதி முசெவேனி வாழ்த்துத் தெரிவித்தார்.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு உகாண்டா ஜனாதிபதி ஜெனரல் யோவேரி ககுதா முசெவேனி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முசெவேனி தனது செய்தியில், திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை அங்கீகரித்தார்.

பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் உகாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மற்றும் இணக்கமான உறவுகளை ஜனாதிபதி முசெவேனி எடுத்துரைத்தார்.

இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் உகாண்டாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தனது செய்தியை நிறைவு செய்த உகாண்டா தலைவர், ஜனாதிபதி திசாநாயக்க தனது புதிய பாத்திரத்தில் வெற்றியடைய வாழ்த்தியதுடன், இலங்கை மக்களுக்கு தொடர்ந்து அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.