புதிய ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் வாழ்த்து

9 0

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகொஷி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அதிமேதகு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகொஷி மேலும் தெரிவிக்கையில்,

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதில். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

இலங்கை மக்கள் தமது தலைவரை தெரிவு செய்வதில் இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டில் தீவிரமாக பங்குபற்றியமைக்காக நாம் வாழ்த்த விரும்புகிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மக்களின் தலைமையிலான புதிய நிர்வாகத்துடன் பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை அடைவதற்கும் எமது வலுவான உறவை அடைவதற்கும் ஜப்பான் தயாராக இருக்கும்.

இலங்கையிலும், ஜப்பானிலும் தலைவர்கள் மாறினாலும் எங்களுடைய நட்பு வலுவானது என்பது வரலாறு. இலங்கையில் இம்முறை நடைபெற்ற தேர்தலின் பின், கடந்த காலத்தைப் போலவே, புதிய பக்கங்களிலும் புதுப்பிக்கப்பட்ட நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் கதைகளால் நிரப்பப்படும் வகையில் எமது உறவின் பக்கம் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.