வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

10 0

வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த முச்சக்கரவண்டி  ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர்  காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று வெளிநாட்டுப் பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.