புதிய ஜனாதிபதி அநுரகுமாரவின் வெற்றியை வவுனியாவில் கொண்டாடிய ஆதரவாளர்கள்

12 0

நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (23) அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வவுனியாவில் கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, வவுனியா இரட்டை பெரியகுளத்தில் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்களுக்கு பால் சோறு வழங்கி புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடினர்.