தண்ணீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு

8 0

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்  கிழக்கு பகுதியில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)  இடம்பெற்றுள்ளது.

11 மாத வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தை தனது தாயுடன் குளியலறையில் இருந்த போது தண்ணீர் நிறைந்த தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.