அ.தி.மு.கவை இணைக்க குழுக்கள் அமைப்பு

205 0

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்களைதை நடத்துவதற்காக இரு தரப்பினரும் குழுக்களை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் உருவாயின.

இதனால், கட்சிக்குள் தொடர்ச்சியாக குழப்ப நிலை நீடித்து வருகின்றது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

இதேவேளை, எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.