வரலாற்றில் கடுமையான போட்டி நிறைந்தவொரு ஜனாதிபதி தேர்தல் – சித்தார்த்தன்

16 0

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கடுமையான போட்டிகள் நிறைந்தவொரு தேர்தல் என்று புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலங்களில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கடுமையான போட்டிகள் நிறைந்தவொரு தேர்தலாகவே இது காணப்படுகின்றது.

பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தாலும்கூட தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரும் வரையில் எதனையும் உறுதியாகக் கூற முடியாதவொரு சூழலே நிலவுகின்றது. மக்களின் தீர்ப்பினை தலைவர்கள் மதித்து அமைதியை தொடரவேண்டும் என்றார்.