2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மாத்தளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 4,243 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 3,816வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 372 வாக்குகளையும்
திலித் ஜயவீர 128 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.