2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் கொழும்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,645 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 4,080 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 561 வாக்குகளையும்
திலித் ஜயவீர 552 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.