நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு 80 சத வீதம் பதிவானதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவிப்பு!

10 0

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் வாக்களிப்பு எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொண்டார்கள். அதிகாரிகள் தமது கடமைகளை சிறப்பான முறையில் முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.

தேர்தல் வாக்களிப்பு அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக இடம்பெற்றது. தோட்டத் தொழிலாளர்கள், கடந்த வருடங்களை விட இந்த வருடம் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுப்பட்டனர்.

என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட குறிப்பிட்டுள்ளார்.