அத்துருகிரியவில் ஜீப் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு

13 0

அத்துருகிரிய – கொடகம வீதியில் நேற்று வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது ஜீப் வாகனத்தின் சாரதியும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் அத்துருகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அத்துருகிரிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.