மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்டகொவியபான பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஹங்கம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் அகுலுகஹா மற்றும் கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மிதிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கொவியபான பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என பொலிஸாரால் அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.