ஜனாதிபதி தேர்தலுக்காக ஒத்திகை

15 0

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குறிய பணிக்குழாமினர், வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகளுடன் புறப்படும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பெட்டி விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதற்காக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.00 மணிக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் உரிய அதிகாரிகள் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின், இன்று ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை (21) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.