ஹெஸ்புல்லா தலைவர் தொலைக்காட்சியில் உரை- தென்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

20 0

ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசரல்லாவின் தொலைக்காட்சி உரைஇடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் இஸ்ரேல் தென் லெபனான் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தென்லெபனான் மீது விமானதாக்குதல்களை மேற்கொள்வதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் விமானங்கள் காரணமாக வானில் பாரிய சத்தங்கள் கேட்கின்றன என பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்புல்லா அமைப்பின் பயங்கரவாத திறமை உட்கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பலதசாப்தங்களாக ஹெஸ்புல்லா அமைப்பு பொதுமக்களின்வீடுகளை இராணுவமயப்படுத்தியுள்ளது அவற்றிற்குள் சுரங்கப்பாதைகளை அமைத்துள்ளது,பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளது தென் லெபனானை யுத்த வலயமாக மாற்றியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேலின் பாதுகாப்பை நிலைநாட்டுவதும்,பொதுமக்கள் தங்கள் இல்லங்களிற்கு திரும்பும் நிலையை உருவாக்குவதுமே நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

லெபனான் மீது தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.