குவைத் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை

13 0

குவைத் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரின் நியமனத்துக்கு வியாழக்கிழமை (18) பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குவைத் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக எல்.பி.ரத்னாயக்கவின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான விதுர விக்ரமநாயக்க, (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.