கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

18 0

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு  நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் 40 பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடெங்கும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.