தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்

11 0

தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு முன்பாக நபரொருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.