அடுத்தமுறை தங்கம் !-தமிழக தடகள வீரர் மாரியப்பன்

18 0

பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வென்ற மூன்றாது பதக்கம் ஆகும். பாராலிம்பிக்ஸில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்பசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார். இந்த முறை வெண்கலம் வென்றிருந்த நிலையில், அடுத்த பாராலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்வது உறுதி என மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார்.

உடல்நிலை மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்தார்.