யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை!

13 0

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரை சேர்ந்த 74 வயதுடையரே  காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து கடற்தொழிலுக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (17)  காலை சென்றவர் மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.