வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரியகொல்ல காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் தீ பரவியதால், காட்டுப்பகுதியின் பத்து ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (18) காலை இந்த தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.