மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

8 0

மாத்தறை, தெய்யந்தர, அத்தப்பத்துகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக தெய்யந்தர பொலிஸார் தெரிவித்தனர்.

தெய்யந்தர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெய்யந்தர, அத்தப்பத்துகந்த பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த வீட்டின் அறையொன்றில் இருந்த கட்டிலுக்கு அடியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெய்யந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.