உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது !

20 0

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பொஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.