உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

9 0

பன்சியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவெல்யாய பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்சியகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

64 வயதுடைய பன்சியகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.