நீரில் மூழ்கி இளைஞன் பலி

13 0

சமனலவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிகட்டு ஓயாவுக்கு நீராடச்சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 20 வயதுடைய கெலிவத்த, பத்தன பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பலங்கொட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்