பொரலஸ்கமுவவில் வீடுடைத்து திருட்டு ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

14 0

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, 12 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 02 மடிக்கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.