கட்டுகஸ்தோட்டையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

17 0

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிட்டிகஹபெல பிரதேசத்தில் நேற்று (15) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிட்டிகஹபெல, ஹல்லொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.