ஆரியகுளம் புகையிரதகடவை பாலத்தினுள் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள்….(காணொளி)

477 0

யாழ்ப்பாணம் ஆரியகுளம் புகையிரதகடவை பாலத்தினுள் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.

மதியநேர புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் பலாலி வீதியை வீதித் தடுப்புக் கம்பத்தின் மூலம் மூடுவதற்குரிய சமிக்ஞை விளக்கு எரிந்து வீதி மூடப்பட்டது.

இந்நிலையில் வீதியின் தடைக்கம்பத்திற்கு அருகில்  பயணித்துக் கொண்டிருந்த பெண் பதற்றமடைந்து திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் அருகிலுள்ள வாய்க்காலில் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் கையில் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் உயிர்தப்பியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.