கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

270 0

 

தமது காணிகளை விடுவிக்கக்கோரி 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

போராட்டத்தில் இடபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடிய வடக்கு மாகாண முதலமைச்சர், குறித்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் இதற்கு தம்மாலான முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.